கூட்டுறவு வங்கி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது பட்ஜெட் உரையில் பேசும் போது, கூட்டுறவு வங்கி விதிகளில் பெருமளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் போது மேற்கொள்ளும் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரு.5 லட்சமாக உயர்த்தப்படும்.
வங்கிகள் திவாலானால் வைப்புத்தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.