மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த தொலைக்காட்சியையும் எதிர்த்த மணிமேகலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவருமே ப்ரியங்காவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக ரசிகர்களிடம் அமைந்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த சீசனில் கோமாளியாக வரும் புகழ் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இதில் பேசிய அவர், இது இருவருக்குமான சண்டை எனவும், இதனை அவர்களே பேசி தீர்த்து இருக்கலாம் ஆனால் தேவையில்லாமல் சோசியல் மீடியாவுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர்களின் சண்டை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் பேசியுள்ளார்.
இதுபற்றி தெரியாமல் பலரும் மைக்குகளை தூக்கி கொண்டு வந்து கேள்விகளை கேட்பதாகவும், இதனை அவர்களே பேசி முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் புகழ் கூறியுள்ளார். புகழ் ப்ரியங்காவுக்கு ஆதரவாக பேசுவதாக ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி வருகின்றனர்.