குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் ஷாலின் ஜோயா. திரைப்பட நடிகையான இவர் பல குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் தமிழில் கண்ணகி படத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர். மேலும் பிரபல யுடியூபர் டிடிஎப் வாசனை இவர் காதலித்தும் வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஜோயாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது. தற்போது தொடர்ந்து படங்கள் நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

இந்நிலையில், மலையாள சினிமாவில் பாலியல் குற்றசாட்டு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் இடைவேளை பாபுவுடன் ஜோயா எடுத்த ரீல்ஸ் வீடியோ வைரல் ஆகியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை அவதூறாக விமர்சனம் செய்து இருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோயா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தபதிவில், அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது எனவும்,தனக்கும் அந்த பிரச்சனைக்கும் சம்மந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும் இங்கு பெயர் தெரியாத வில்லன்கள் உள்ளனர்.அவர்களை நான் வெறுக்கிறேன்.மேலும் தனக்கு இதனை பார்க்கும்போது தற்கொலை எண்ணம் வருவதாக தெரிவித்துள்ளார்.