இன்றைய காலத்தில் மாப்பிளைகளுக்கு பெண்கள் கிடைப்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது. அதுவே ட்ரெண்டாக 90’ஸ் கிட்ஸ் கல்யாண கனவே மறந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு நூதன சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் நடந்துள்ளது.

நம் ஊரில் இருப்பது போலவே வெளிநாடுகளிலும் சில வினோத பழக்கங்கள் உள்ளன. அதில் ஒன்றாக மத்திய மெக்ஸிகோ நாட்டில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலாவில் அதன் மேயர் விக்டர் அவ்வூரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இயற்கையின் கருணையை வேண்டி இவர்கள் இது போன்ற சடங்கை பின்பற்றி வருகிறார்கள். அந்த ஊரில் இவ்வாறு நடப்பது நமக்கு புதியதாக இருந்தாலும், அங்கு அது சகஜமே.
ஏன் நம் ஊரில் கூட கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் நடந்தால் மழை வரும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறதே. கிறிஸ்துவ முறைப்படி மாப்பிளை வர, பெண்ணான அந்த முதலைக்கு திருமணத்திற்காக சிறப்பான உடை அணிவிக்கப்பட்டிருக்கிறது. கடிக்கப்போற பொண்ண இருந்தாலும் நம் உஷரில் நாம் இருக்க வேண்டும் அதனால் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது.
கல்யாண மாப்பிள்ளையிடம் இது குறித்து கேட்கப்பட்ட பொது, “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” என்றார். மெக்சிகோவில் நாட்டில் இது போன்ற வினோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை பொண்ணுடன் ஜாலியாக நடனம் ஆடி கொண்டிருந்தார். அந்த விடியோவை நீங்களும் காண…..
Video Courtesy – Thanthi TV