சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கியமான ரியாலிட்டி ஷோக்கள்தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. பிக்பாஸ் முடிந்த கையோடு விஜய் டிவி ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் தற்போது சீசன் 4 வெகு விமர்சையாக தொடங்கி இருக்கிறது. பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரேஷி, மணிமேகலை ஆகியோர் இருக்க ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரை புதிய கோமாளிகளாக அறிமுகப்படுத்தி இருக்கிறது விஜய் டிவி. வழக்கம் போல் ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக தொடர்கிறார்கள். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கோமாளிகளில் முக்கிய பங்கு வகித்த சிவாங்கி இந்த முறை குக்காக களம் இறங்கி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இந்த முறை இடம்பெறவில்லை. இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய குக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் மேகா படத்தில் ஹீரோயினாக நடித்த சிருஷ்டி, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரின் சிரிங்கர், ரஜினியுடன் முத்து படத்தில் நடித்திருந்த விசித்ரா, நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் 10-வதாக மைம் கோபி குக்காக கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷனில் இயக்குனர் கிஷோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். மீதம் 9 குக்குகளுடன் இந்த வாரம் போட்டி தொடர்கிறது. இந்த நிலையில் இன்று ஷூட்டிங்கிற்கு தயார் ஆகி வந்த விசித்ரா திடீரென குக் வித் கோமாளி செட்டை விட்டு வெளியேறினார். அதற்க்கு காரணமாக அவரது குடும்பத்தில் எதோ எமெர்ஜென்சி என்று கூறப்பட்டது. ஷெரின் கூறும் போது விசித்ராவின் தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு என்பதால் அவர் இன்றைய ஷூட்டிங்கில் இருந்து வெளியேறியதாக கூறினார். ரக்ஷன் கூறும் போது அவர் அடுத்த வாரம் வந்து கலந்து கொள்வர் என்று கூறினார். உண்மையிலேயே ஏதும் அவசரமா? இல்லை நிகழ்ச்சியை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.