Categories: சினிமா

நகுல் தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு ரஜினி மகள்கள் காரணமாக இருக்கலாம்.! குற்றம் சாட்டிய தேவயானி கணவர்

வெளியிட்டது

நகுல் தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு ரஜினியின் மகள்கள் காரணமாக இருக்கலாம் என்று நடிகை தேவயாணியின் கணவர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயாணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழிகளில் நடித்திருக்கிறார். ஹிந்தி மற்றும் வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்றார் தேவயாணி. இந்த கதை சுமார் ஐந்து ஆறு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்றும் நாடகத்திலும் நடித்து வருகிறார். இன்றைக்கும் அவருக்கு செல்வாக்கு குறையாமலேயே இருந்து வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நகுல் தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு ரஜினி மகள்கள் காரணமாக இருக்கலாம்.! குற்றம் சாட்டிய தேவயானி கணவர் 1

தேவயாணியும் இயக்குனர் ராஜ்குமாரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் தேவயாணியின் காதலுக்கு அவரது வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தேவயானி ராஜகுமாரனும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் வைத்து நடைபெற்றது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். தேவயாணியின் தம்பி நகுலும் ஒரு திரைப்பட நடிகர் ஆவார். இவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். நகுல் ஆரம்பத்தில் பாய்ஸ் என்ற படத்தில் தான் நடித்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் பாடகராகவும் இருக்கிறார் நகுல்.

தேவயாணிக்கும் ராஜ்குமாருக்கும் திருமணம் ஆகி 21 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் 21 ஆண்டுகள் ஆன பின்பும் இருவரும் பேசிக் கொள்வதில்லை. இதற்கு காரணமாக ராஜ்குமாரன் சில விஷயங்களை கூறியிருக்கிறார். நகுல், ரஜினிகாந்தின் மனைவி லதாவின் பள்ளியில் தான் படித்தார்.ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் நகுலின் நெருங்கிய நண்பர்கள். தேவயாணியை தான் திருமணம் செய்த போது ரஜினியின் மகள்கள் நகுலை கிண்டல் செய்திருக்கலாம், எனவே அதை அவமானமாக எண்ணித்தான் நகுல் இன்று வரை தன்னிடம் பேசாமல் இருப்பதாக ராஜ்குமாரன் தெரிவித்தார். அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

 

Youtube Video Code Embed Credits: V News27

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்