Categories: சினிமா

தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி நிற்கும் சூப்பர் ஸ்டார் பேரன்கள்.! ஐஸ்வர்யா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

வெளியிட்டது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் யாத்ரா,லிங்கா தனது நண்பர்களுடன் வீட்டில் பூஜை ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி நிற்கின்றனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்கள். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளாக இருக்கும் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி நிற்கும் சூப்பர் ஸ்டார் பேரன்கள்.! ஐஸ்வர்யா வெளியிட்ட அழகிய போட்டோஸ் 1

தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து வரும் லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது.


தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மதுவந்தி போன்ற பலர் இருக்கின்றனர்.

புகைப்படங்களை பதிவிட்ட அவர் தனது மகன்கள் தான் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டதாக பெருமிதம் கொண்டுள்ளார். இதை பார்த்த பலரும் இரண்டு பேரும் இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விட்டார்களே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது தனுஷை பிரிந்து தனது தந்தை ரஜினி உடன் ஐஸ்வர்யா வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்