பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருப்பவர்கள் தான் அர்னவ் மற்றும் அன்ஷிதா. இருவரும் இணைந்து செல்லம்மா சீரியலில் நடித்ததால் பிரபலம் ஆகி உள்ளனர். இந்த சீரியலின் போது இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு இருப்பதாக அவரது மனைவி திவ்யா புகார் அளித்து இருந்தார். மேலும் அன்ஷிதா உடன் தொடர்பு வைத்துக்கொண்டு நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னை தாக்கியதாகவும் கூறி இருந்தார் திவ்யா. இது சம்மந்தமாக வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. விரைவில் இருவரும் வெளியே செல்வார்கள் என கூறி வரும் நிலையில், அர்னவ் மனைவி திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் நடனமாடிய அவர் கேப்ஷன் ஆக all good things must come to an end என குறிப்பிட்டு உள்ளார்.
இது அவரின் கணவர் மற்றும் அன்ஷிதாவை தான் தாக்கி கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் திவ்யாவையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வரவேண்டும் என அழைத்து வருகின்றனர். இவர் மட்டும் உள்ளே வந்தால் ஆட்டம் பயங்கரமாக சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.