Categories: அரசியல்

TVK Vijay-ஐ ஒருமையில் திட்டிய DMDK Premalatha..! அதிர்ச்சியில் TVK நிர்வாகிகள்..!

வெளியிட்டது

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவரை காண அங்கு திரண்ட மக்கள் கூட்டத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சோக நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்சா என பலரும் இந்த நிகழ்விற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

TVK Vijay-ஐ ஒருமையில் திட்டிய DMDK Premalatha..! அதிர்ச்சியில் TVK நிர்வாகிகள்..! 1

தற்போது விஜயை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கரூருக்கு விஜய் சொன்ன நேரத்தில் வந்து இருக்க வேண்டும்.மக்கள் வெயிலில் காத்து இருக்கும் பொழுது, அவர் மெதுவாக தனி விமானத்தில் கிளம்பி ஊர்வலமாக வந்து கொண்டு இருக்கிறார். பிரச்சார வாகனத்தில் மேல் ஏறி நின்று மக்களை பார்க்க வேண்டியதானே நீ.

உன்னை பார்க்க தானே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நீ வண்டிக்குள் உட்காந்து கொண்டால் அவர்கள் உன்னை பார்க்க வேண்டி கூட்டம் கூட்டமாக வருகின்றனர். உன்னை பார்த்து இருந்தால் அபப்டியே களைந்து சென்று இருப்பார்கள் என கூறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்