Categories: சினிமா

உயிர் மேல ஆச இருந்தா இந்த படத்துக்கு வராதீங்க ப்ரோ.! DSP படத்தை கழுவி ஊற்றிய பொதுமக்கள்.!

வெளியிட்டது

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் டிஎஸ்பி படத்தின் பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் உலகில் துணை நடிகராக இருந்து தற்போது தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் மக்கள் செல்வன் என்று அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த அனைத்து படங்களுமே பெரும்பாலும் வெற்றி படங்களாகவே இருந்தது. இவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், சேதுபதி, நானும் ரவுடி தான், காத்து வாக்குல இரண்டு காதல், விக்ரம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உயிர் மேல ஆச இருந்தா இந்த படத்துக்கு வராதீங்க ப்ரோ.! DSP படத்தை கழுவி ஊற்றிய பொதுமக்கள்.! 1

தற்போது இவர் சுமார் ஆறு படங்களில் நடித்து வருகிறார். ஜவான் என்கிற ஹிந்தி படத்திலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் டிஎஸ்பி. பிரபல இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்திகேயன் சந்தானம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். டி இமான் இசையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இருந்து பாடல்கள் ட்ரெய்லர், டீசர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், இந்த படத்தின் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இல்லை என்ற கருத்தையே கூறி வருகின்றனர்.

குறிப்பாக படம் மொக்கை, சிம்ப்ளி வேஸ்ட், தூக்கமாக வருகிறது, விஜய் சேதுபதி நன்றாக நடித்திருந்தார், ஆனால் டைரக்டர் சொதப்பிவிட்டார் என்றெல்லாம் கூறி வருகின்றனர். மேலும் சேதுபதி படம் போன்று எதிர்பார்த்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும் இது விஜய் சேதுபதிக்கு தோல்வி படம் தான் என்றும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: chennai day

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்