ஓட்டு கேட்டு சென்ற இடத்தில் ஈஸ்வரிக்கும் ஜனனிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஈஸ்வரிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஜனனி மற்றும் சக்தி ஆகியோர் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் தெருவில் வசிக்கும் மக்கள் சிலர் கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியில் ஈஸ்வரியும், ஜனனியும் உறைந்து போய் நின்று கொண்டிருக்கின்றனர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தனது கணவர் குணசேகரனை எதிர்த்து ஈஸ்வரியே தேர்தலில் நிற்கிறார். சாருபாலாவுக்கு எதிராக தனது மனைவி ஈஸ்வரியை குணசேகரன் களம் இறக்கி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டு கேட்டு சென்ற இடத்தில் ஈஸ்வரிக்கும் ஜனனிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! ப்ரோமோ இதோ.! 1

ஆனால் சாருபாலாவோ, “ஈஸ்வரிக்கு வழிவிட்டு தான் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்” என்று அதிரடியாக முடிவெடுத்தார். எனவே குணசேகரன் ஈஸ்வரியை வாபஸ் வாங்க செய்துவிட்டு அன்ன போஸ்ட்டாக ஜெயித்து விடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் ஈஸ்வரியோ, “தான் வாபஸ் வாங்கப் போவதில்லை, தான் இந்த தேர்தலில் நின்று ஜெயித்து காட்டப் போகிறேன்” என்று குணசேகரனுக்கு எதிராக தேர்தலில் களமிறங்குகிறார். குணசேகரன் மற்றும் ஈஸ்வரி இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஈஸ்வரிக்கு ஆதரவாக ஜனனி மற்றும் சக்தி இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு கேட்டு சென்ற இடத்தில் பொதுமக்கள் ஈஸ்வரியிடம் நீங்கள் ஜெயித்து வந்தால் எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள்? என்று கேட்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத ஈஸ்வரி, ஜனனி, சக்தி ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்