சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது தர்ஷினியை தேடி மருமகள்கள் அவர் இருக்கும் இடத்தை நெருங்கிய நிலையில், தர்ஷினி அந்த இடத்திலிருந்து தப்பித்து வெளியேறி வேறு இடத்திற்கு சென்றிருக்கிறார். இதனால் மருமகள்கள் தற்போது ரவுடிகளிடம் மாட்டிக் கொள்வார்களோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினியை ரவுடிகள் சிலர் கடத்திச் செல்கின்றனர். அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் மருமகள்கள் தற்போது தர்ஷினி இருக்கும் இடத்தை நெருங்கி இருக்கின்றனர். அவரை கடத்தி வைத்திருக்கும் கட்டிடத்திற்கு மருமகள் வருகை தருகின்றனர். அப்போது தர்ஷினி கைப்பட எழுதி தூக்கி வீசிய கடிதம் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அந்த சமயம் பார்த்து தர்ஷினி அங்கிருந்து தப்பித்து வெளியில் சென்று விடுகிறார்.
இதனால் மருமகள்கள் ரவுடிகளிடம் சிக்கிக் கொள்வார்களோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. மறுபுறம் கதிர் சக்தியிடம் தனது தவறை உணர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV