சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஆதிரையை அடிப்பதற்காக குணசேகரன் கையை ஓங்குகிறார். அவரது கையை பிடித்து கதிர் தடுத்து நிறுத்துகிறார். இதனால் ஆதி குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தனது தம்பிகள் தனக்கு எதிராக திரும்புவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதி குணசேகரன் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனின் மக்கள் தர்ஷினி காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் ஆதி குணசேகரன் தனது மனைவியும், ஜீவானந்தமும் இணைந்து தான் தர்ஷினியை ஒளித்து வைத்திருப்பதாக கூறி நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது ஆதிரை இது குறித்து கேள்வி எழுப்புகிறார். “தர்ஷினியை காணவில்லை என்கிற பதட்டம் கொஞ்சம் கூட உங்களிடம் இல்லை. அண்ணியை குறை சொல்வதற்காகவே நீங்கள் இவ்வாறு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறி ஆதிரை குணசேகரன் மீது சந்தேகப்படுகிறார்.
இதனால் கோபமடையும் குணசேகரன் ஆதிரையை அடிப்பதற்காக கையை ஓங்குகிறார். அவரது கையை கதிர் பிடித்து தடுத்து நிறுத்துகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஆதி குணசேகரன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV