சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தனது தாயை கொடுமைப்படுத்தும் தந்தை நாச்சியப்பன் குடும்பத்தாரிடம் ஜனனி சவால் விடுகிறார். “எந்த வாயால் தனது தாயை திட்டுகிறார்களோ அதே வாயால் அவர்களை பெருமையாக பேச வைப்பேன். அதேபோல இந்த பாட்டியும் என்னுடைய உறவினர்களும் என்னை பெருமையாக நினைக்கும் படி செய்வேன்” என்று சபதம் எடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனனியின் தந்தை நாச்சியப்பன் தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டு தனது மனைவி பார்வதியையும் மகள் ஜனனியையும் நடுத்தெருவில் விட்டு விடுகிறார். அவர் ஒரு காரணத்திற்காக இதை செய்கிறேன் என்று சொன்னபோதும் ஜனனியும், பார்வதியும் அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் பார்வதியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு சத்தியம் செய்யும்படி நாச்சியப்பனின் குடும்பம் கூறுகிறது. அதேபோல தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், “இனி தனக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி பார்வதி தாலியை கழட்டி கொடுத்துவிட்டு கோவிலில் சூடத்தின் மேல் சத்தியம் செய்கிறார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் ஜனனி, “இந்த பாட்டி வாயால் தன்னை பேத்தி என்று அழைக்கும் படி செய்வேன். அதேபோல என்னுடைய கசின் பிரதர்ஸ் அனைவரும் என்னை நினைத்து பெருமை படும்படி செய்வேன் என சவால் விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV