சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷினியை தேடி அலைந்து கொண்டிருக்கும் சக்தியை கார் ஒன்று வேகமாக வந்து மோதுகிறது. இதனால் சத்தி சுய நினைவை இழந்து ரோட்டில் அடிபட்டு கிடக்கிறார் அதை பார்க்கும் நந்தினி, ஜனனி, ரேணுகா, ஈஸ்வரி ஆகிய நால்வரும் கதறி அழுது கொண்டிருக்கிறனர் அடுத்து என்ன நடக்கும்? தர்ஷினியை தேடுவதில் சுணக்கம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரனின் மகளை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதில் தர்ஷினிக்கு சிறிதும் விருப்பமில்லை. இந்த நிலையில் தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி விடுகின்றனர் ஆனால் ஈஸ்வரி மற்றும் மற்ற மருமகள் இணைந்து தர்ஷினியை எங்கோ மறைத்து வைத்திருப்பதாக குணசேகரன் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அடையாளம் தெரியாத சிலர் தர்ஷினியை கடத்திக்கொண்டு காட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
அவர்களைத் தேடி சக்தியுடன் இணைந்து மருமகள்கள் நான்கு பேரும் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கடையிலிருந்து வெளியேறிய சக்தி மீது கார் ஒன்று வேகமாக மோதுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் சக்தி மயக்கத்தில் கிடக்கிறார். அவருக்கு என்ன ஆனது? இனி தர்ஷினியை எப்படி காப்பாற்ற போகின்றனர் என்கிற பரபரப்புடன் ப்ரோமோ முடிவடைந்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV