சொத்து மொத்தமும் போச்சு.! ஆடிட்டர் சொன்னதை கேட்டு நிலை குலைந்து போன ஆதி குணசேகரன்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது அப்பத்தாவின் 40% பங்குகள் அனைத்தும் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாறியிருக்கும் விஷயத்தை ஆடிட்டர் வந்து ஆதி குணசேகரனிடம் கூறுகிறார். இதனால் ஆதி குணசேகரன் நிலைகுலைந்து போயிருக்கிறார். மேலும் ஆதி குணசேகரன் தான் ஜீவானந்தத்தை வைத்து இது போன்ற அப்பத்தாவின் சொத்துக்களை திருடி இருப்பதாக நினைத்துக் கொள்ளும் ஜனனி ஆதி குணசேகரனை சும்மா விடமாட்டேன் இன்றைக்கு நானா அவரா என்று ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று கோபப்படுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்து மொத்தமும் போச்சு.! ஆடிட்டர் சொன்னதை கேட்டு நிலை குலைந்து போன ஆதி குணசேகரன்.! 1

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் அப்பத்தாவுக்கு 40 சதவீத பங்குகளை அவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அப்பத்தாவின் சொத்துக்களை சமூக சேவை செய்து வரும் ஜீவானந்தம் தனது பெயருக்கு மாற்றி இருக்கிறார். இது குறித்து எதுவும் தெரியாத ஆதி குணசேகரன் தற்போது ஆடிட்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அரசாங்கம் எதுவும் தன் சொத்தை முடக்கி விட்டதா என்று ஆடிட்டரிடம் கேட்கிறார். அதற்கு அவர் அரசாங்கம் இல்லை ஜீவானந்தம் என்ற ஒருவர் என்று பதிலளிக்கிறார். ஜீவானந்தம் யார் என்றே தெரியாத ஆதி குணசேகரன் மற்றும் கதிர் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.


மற்றொருபுறம் ஜனனியும் ஆதி குணசேகரன் தான் ஜீவானந்தத்தை ரெடி செய்து வீட்டிற்குள் ஆளில்லாத சமயத்தில் புகுந்து அப்பத்தாவின் கைரேகையை பெற்று அவரது சொத்துக்களை எழுதி வாங்கி இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு ஆதி குணசேகரன் மீது கோபப்படுகிறார். இன்றைக்கு அவரா நானா என்று ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று சொல்லி கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்