ஆதி குணசேகரனை கைது செய்து அழைத்துச் சென்ற கொற்றவை.! சாதித்து காட்டிய ஜனனி.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஜீவானந்தம் மனைவி கொலை வழக்கில் கிள்ளிவளவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதி குணசேகரனை கொற்றவை கைது செய்து அழைத்துச் செல்கிறார். அதேபோல தர்ஷினி கடத்தல் வழக்கிலும் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனை கைது செய்து அழைத்துச் சென்ற கொற்றவை.! சாதித்து காட்டிய ஜனனி.! ப்ரோமோ இதோ.! 1

மாரிமுத்து இறப்பிற்கு பின்னர் திக்கு தெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரை இயக்குனர் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கதைக்களமும் அதற்கு ஏற்றார் போல் நகர்ந்து கொண்டிருக்கிறது. வருகிற ஜூன் 8ம் தேதியுடன் இந்த சீரியல் நிறைவு பெற இருப்பதால், கதையை இயக்குனர் வேகமாக நகர்த்தி இருக்கிறார். இந்த நிலையில் இத்தனை நாட்களாக ஆணவத்தில் அலைந்து கொண்டிருந்த ஆதி குணசேகரன் தற்போது போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜீவானந்தம் மனைவி கொலை வழக்கில் கிள்ளிவளவன் சாட்சி கூறியதால், அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சீரியலின் ரசிகர்கள் பலரும் கதையை பாசிட்டிவாக மாற்றத்தான் கூறினோம், ஆனால் கதையை முடிக்கிறீர்களே என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video.! 

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்