எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நேற்று வரை இருந்த ஆதி குணசேகரன் இல்லாமல் தற்போது புது ப்ரோமோ ஒன்றை சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கண் கலங்கி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். நேற்றைய எபிசோடில் அறிவியல் வகுப்பு எடுக்கிறேன் என்று சொல்லி ரேணுகா டீச்சர் மற்றும் குழந்தைகளை மாடிக்கு அழைத்துச் செல்கிறார். அதை சந்தேகிக்கும் கரிகாலன் நோட்டமிட்டு கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பதற்காக பள்ளி ஆசிரியை ரேணுகாவின் வீட்டிற்கு அவர்களை அழைத்து வருகிறார். ஆனால் இதை ரேணுகாவின் கணவர் ஞானம்,ஆதி குணசேகரன் மற்றும் கரிகாலன் என அனைவரும் சந்தேகப் படுகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கீழே இறங்கி வரும் ரேணுகாவை வழிமறிக்கும் ஞானம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கரிகாலனும் குறுக்கே புகுந்து ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் கோபமான ரேணுகா கத்திக் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொருபுறம் ஹாலில் இருக்கும் சேர் காலியாக இருக்கிறது. நேற்று வரை அந்த சேரில் ஆதி குணசேகரன் அமர்ந்திருந்த நிலையில் இன்று அவர் இல்லாமல் இந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கண் கலங்கி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். நேற்று வரை கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த சேர் தற்போது காலியாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV