சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஈஸ்வரி கதிர் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருக்கிறார். இதைத்தான் பல நாள் எதிர்பார்த்திருந்ததாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புடன் கதை நாளுக்கு நாள் நகர்ந்து வருகிறது. வீட்டிலிருந்து காணாமல் போன குணசேகரன் திரும்பி வரப்போவதாகவும், திரும்பி வரும் அவர் திருவிழாவில் வைத்து அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் இருவரின் கதையை முடிக்க இருப்பதாகவும் கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரன் காணாமல் போனதிலிருந்து வீட்டில் உள்ள மருமகள்கள் அனைவரையும் கொடுமைப்படுத்த தொடங்குகின்றனர். குறிப்பாக கதிர், ஞானம், விசாலாட்சி, கரிகாலன் என அனைவரும் சேர்ந்து கொண்டு மருமகள்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். அதிலும் கரிகாலனின் தாயார் ஜான்சிராணி சேர்ந்து கொண்டார். இதனால் கதைக்களம் சற்று எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். கதிருக்கும் ஈஸ்வரியின் மகன் தர்ஷனுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அந்த தாடிக்காரன் உனக்கு அப்பனாக வந்தால் நன்றாக இருக்கும் நீ என்று சொன்னாய் அல்லவா என கதிர் தர்ஷனை திட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஈஸ்வரி ஏதோ கூற, கதிர் அவரை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி கதிரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதைத்தான் இத்தனை நாளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்ததாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV