எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகியவர் தான் மதுமிதா. இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் . ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் திடீரென முடிவுக்கு வந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தது. தற்போது அதனை மதுமிதா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் தனது வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளதால், எதிர்நீச்சல் 2ஆம் பாகத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். மேலும் அனைவர்க்கும் நன்றி எனவும் கூறி உள்ளார்.
இந்நிலையில் நாடகத்தில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு திருமணம் ஆக உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் சீரியல்களில் நடிக்க முடியாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அந்த புதிய அத்தியாயம் குறித்து அவரே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.