தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனது மகளின் சமூகவலைத்தள பதிவு பொய் எனவும், அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு வயதில்லை எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஐசிசியின் தற்போது தலைவரான கங்குலியின் மகளான சனா கங்குலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், “இன்று, நான் முஸ்லிம் அல்ல கிறிஸ்தவன் அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். இவர்கள் ஏற்கனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட இளைஞர்களையும் குறிவைத்து வருகிறார்கள். நாளை இது உங்களின் மீதும் பாயும்.

உங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படித்தான் இருக்க வேண்டும். இறைச்சி சாப்பிடக்கூடாது, மது அருந்துவது கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது, வருடாந்திர யாத்திரையாக கோயிலுக்குச் செல்லக் கூடாது, அவர்கள் கூறும் பற்பசையை தான் பயன்படுத்த வேண்டும், பொது இடங்களில் கை குலுக்குதல் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முத்தம் கொடுப்பது இதற்கு பதிலாக நீங்கள் `ஜெய் ஸ்ரீராம்’ என்று தான் முழங்க நேரிடும். ஒருவரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள நீங்கள் இதை உணர வேண்டும்” என்று குஷ்வந்த் சிங் அவர்களால் எழுதப்பட்டு 2003-ம் ஆண்டு வெளியான ‘தி எண்ட் ஆஃப் இந்தியா’ (The end of India) புத்தகத்தின் உள்ள சில வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தெரிவிக்கையில், “தயவுசெய்து இந்த விவகாரத்தில் எனது மகள் இழுக்காதீர்கள். என் மகள் பலி விட்டதாக கூறப்படும் புகைப்படம் தவறானது. அரசியல் பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு வயது அவளுக்கு கிடையாது” என கூறினார்.
கங்குலியின் இக்கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் திரைப்படத் தயாரிப்பாளரான ஒனிர், ” ஒரு தந்தையாய் பெருமை படுவதற்கு பதிலாக ஏன் வெட்கப்படுகிறார்கள். உங்களுடைய அமைதி போதுமானதாக இல்லை. தயவுசெய்து இளைஞர்களின் குரலை நடக்க முயற்சிக்க வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இது குறித்து அரசியல் ஆர்வலரான சீலா ராசித் கூறுகையில், ” உங்களது மகள் சரியாக சொன்னதை பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். இளம் பெண்களும் அனுபவம் மிக்கவர்கள் போல அரசியல் பேச உரிமை உண்டு” என கூறியுள்ளார்.