பிரபல யூடியூபராக இருக்கும் ஜி.பி.முத்து தற்போது சொந்தமாக தோட்டத்திற்காக இடம் ஒன்றை வாங்கி இருக்கும் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். டிக் டாக் செயலி மூலம் பிரபலமாகி இன்று சின்னத்திரை, வெள்ளைத்திரை என கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தனது கலகலப்பான பேச்சால் பலரையும் கவர்ந்தார். பின்னர் இவரின் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியதை தொடர்ந்து ஜி பி முத்து வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் டாப் ரியாலிட்டி ஷோக்களாக இருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் உயர் ரக கியா காரை வாங்கி இருந்ததாக வீடியோ வெளியிட்டு இருந்த அவர் தற்போது ஒரு புது வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது நீண்ட நாள் கனமான தோட்டம் அமைப்பதற்காக நிலம் ஒன்றை வாங்கி இருப்பதாக ஜிபி கூறியிருக்கிறார். சொந்தமாக நிலம் வாங்கி அதில் செடிகள் பயிரிட்டு அதை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் தன்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்தப் பயிரில் விளையும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் நம் நிலத்தில் முட் செடிகள் இருக்கக் கூடாது. அவை அனைத்தையும் அகற்றி பயன்படும் வண்ணம் மாற்ற வேண்டும் அதற்காக 40 சென்ட் அளவில் நிலம் வாங்கி இருக்கிறேன் என்று சொல்லி வீடியோவை பகிர்ந்துள்ளார். பலரும் அவரின் அந்த வீடியோவிற்கு லைக்குகளை்குவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Gpmuthu Official