Categories: அரசியல்

மொத்த இந்தியாவும் காஷ்மீர் போலாகிறது

கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியது. அன்றைய தினத்தில் அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரதாப் இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கத்தில் எழுதுகையில், ” காஷ்மீரை இந்திய மயமாக்குவதாக பாஜக நினைத்தது. ஆனால் அதற்கு பதிலாக இந்தியாவையே காஷ்மீர் மயமாக்குவதை தான் நாம் காண்கிறோம். இந்திய ஜனநாயகத்தின் வரலாறு இரத்தத்தாலும் துரோகத்தாலும் எழுதப்படுகின்றது” விமர்சனம் செய்திருந்தார்.

அவருடைய எச்சரிக்கை செயலாக்கம் பெற கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. இறுதியாக இன்று நாம் காஷ்மீராக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் என்னும் சர்ச்சைக்குரிய சட்டத்தை பாஜக அமலாக்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களுக்கு எல்லாம் பதிலாக பாஜகவிடம் ஒரே ஒரு கருவி தான் இருக்கின்றது. இந்தக் கருவி ஏற்கனவே காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டதாகவும்.

மொத்த இந்தியாவும் காஷ்மீர் போலாகிறது 1

இணையத்தள சேவைகளை முடக்கி இதன் மூலம் கிழக்கிலிருந்து வரும் குரல்களை மௌனமாகி உள்ளது மத்திய அரசு. அசாமில் போராட்டக்காரர்கள் கொன்று குவிக்க படுகிறார்கள். மேலும் ஊபா சட்டங்களும் பயன்படுத்தப்படுகிறது.

டெல்லியில் நடந்த மாணவர்களின் போராட்டம் ஏற்கனவே காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகளிலும், நூலகங்களிலும் நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை காட்டுத்தனமாக வீசினர். இதனையெல்லாம் தாண்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் சட்டவிரோதமானவை மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என சொல்லாமல் இருக்கவேண்டுமென பாஜக நினைக்கிறது.

காஷ்மீரில் இணைய தொடர்புகளை துண்டிக்கப்பட்டது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இவற்றைப் பற்றி உச்சநீதிமன்றம் எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதனால் இத்தகைய கொடுமையான நடவடிக்கைகளை பாஜக அரசு மகிழ்ச்சியுடன் முன்னெடுத்துச் செல்லும். இத்தகைய அடக்கு முறையிலிருந்து நாம் வெளியேற விரும்பினால் தப்பித்துக்கொள்ளலாம். அதற்கு நாம் மத்திய அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றபடி, நம்மை காப்பாற்ற இங்குள்ள சட்டங்களால் எதுவும் செய்ய முடியாது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்