தேசிய குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியா பல முதலீடுகளை இழக்கும்: டிம் ட்ராபர்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியா பல முதலீடுகளை இழக்கும் என இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர் ஆன டிம் ட்ராபர் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியா பல முதலீடுகளை இழக்கும்: டிம் ட்ராபர் 1
டிம் ட்ரபர்.

இந்தியா ஒரு மதத்தின் மேல் இன்னொரு மதத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது, அந்நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமா என தனக்கு கவலை இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிம் ட்ரபர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து தி வையர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “என்னை பொறுத்தவரை சுதந்திரம் என்பது முக்கியமானது. அதிகளவிலான சட்ட விதிகளும் மற்றும் அடக்குமுறைகளும் பெருவாரியாக ஊழலை உருவாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இனமக்கள் மற்றவர்களைவிட சமூகத்தில் சிறப்பான முறையில் அரசாங்கத்தால் கவனிக்கப்படும் போது, அங்கு அநியாயங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இது ஒரு புற்று நோய் போல சமூகத்தில் ஊடுருவிச் செல்கிறது. இத்தகைய மோசமான நடத்தை உள்ள நாட்டில் முதலீடு செய்ய விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்