அண்மையில் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி வேலன் அவர்களுக்கு உருவ சிலை வைக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரை துறை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், பிரஷாந்த், பிரபு, கவுண்டமணி, செந்தில், நடிகைகள் ராதிகா என பலர் பங்கெடுத்து சிறப்பித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மேடைக்கு வரும் போது, அமர்ந்திருந்த கமலுக்கு வணக்கம் வைக்காமல் தயாரிப்பாளர் கே.ராஜன் சற்று நகன்று சென்று பக்கத்தில் இருக்கும் ஐசரி வேலனின் மனைவிக்கும் மற்ற பிற திரை நட்சத்திரங்களுக்கும் வணக்கம் வைத்து அமர்ந்தார்.
பின்னர் பேசும் பொது கூட கமலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நகன்று சென்று விட்டார். இது அங்கு இருந்தவர்களுக்கும் சிறு கசப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டி ஒன்று அளித்து விளக்கி கூறி உள்ளார்.
அதில், “முன்னர் தனக்கும் கமலுக்கும் நடந்த பிரெச்சனையை பற்றி குறி, அப்போது கொஞ்சம் கூட உதவிடாமல் ஒதுங்கி சென்ற கமலை பார்த்தவுடன் நான் என் வணக்கம் கூற வேண்டும், அப்போது ராஜனை யார் என கேட்ட அவர்க்கு வணக்கம் கூறும் அளவிற்கு நான் மனசாட்சி இல்லாதவன் இல்லை.”
“உன்னைவிட நான் வயதில் மூத்தவன், முதலில் நீ தான் எனக்கு வணக்கம் கூறியிருக்க வேண்டும், நீ செய்யாத போது, நான் ஏன் செய்ய வ வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் ஐசரி வேலன், விக்ரம் படம், நடிகர் உதயநிதி விக்ரம் படம் வெளியிடும் பிரச்சனை என பலதை குறித்தும் பேசியுள்ளார். ஏற்கனவே சென்ற வாரம் பயில்வான் ரங்கநாதனுடன் வம்பு இழுத்தவர் இன்று கமலுடன் சண்டைக்கு நிற்கிறார், இவருக்கு வேற வேலையே இல்லையா? என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Video Courtesy – CineUlagam