கயல் சீரியலில் தற்போது பல அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் கயலின் தங்கை ஆனந்தியால் தற்போது கயல் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட்டான சீரியல்களில் ஒன்றுதான் கயல். டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் பிடித்திருக்கும் இந்த தொடரில் தற்போது அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்கிற ஆவலில் பலரும் சீரியலை பார்த்து வருகின்றனர். கயல் எழில் திருமணம் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இன்று புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கயலிடம் அவரது தங்கை ஆனந்தி அழுது கொண்டே வந்து பேசுகிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பதறிப் போகும் கயல் என்ன நடந்தது என்று கேட்க அவர் ஒரு அறைக்கு அழைத்து வருகிறார். அங்கு பிரபு மயங்கி கிடப்பது போல் கிடக்கிறான். ஆனால் அவன் இறந்துவிட்டதை ஆனந்தி கயலிடம் சொல்லாமல் மறைக்கிறார். பின்னர் கயல் பிரபுவை எழுப்ப முயற்சி செய்யும் போது பிரபு இறந்து விட்டான் என்று ஆனந்தி கூறுகிறாள். இதனால் கயல் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின்னர் ஆனந்தியை காப்பாற்றுவதற்காக இந்த உண்மையை அனைவரிடமும் மூடி மறைக்கின்றனர். பின்னர் அறையை விட்டு வெளியே வந்த அவர்களிடம் ஏன் இப்படி ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்று கேட்க, ஆனந்தியும் கயலும் பதறிப் போகின்றனர். பின்னர் ஆனந்தியை தர தரவெனை இழுத்துக் கொண்டு கயல் செல்கிறார். கயல் செய்ததை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இதனால் கயல் ஆனந்தியை காட்டிக் கொடுப்பாரா?
இல்லை தனது தங்கையை காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்வாரா என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV