யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிய நடிகை நட்சத்திரா. இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் பேராதரவினை பெற்று இருக்கிறார் இவர். இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி உள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்தார்.

வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் குடும்ப தலைவிகள் மத்தியில் பிரபலம் ஆகினார்.பின்னர் விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இதழ் என்கிற மகளும் உள்ளார். தற்போது நட்சத்திரா தனது வீட்டில் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடி உள்ளார்.
இவரின் வீட்டு இந்த கொண்டாட்டத்திற்கு சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி கலந்துகொண்டு உள்ளார். நட்சத்திரா தனது மகளுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நட்சத்திராவின் மகளை கிருஷ்ணர் போலவே அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.