கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயலும் எழிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, எழிலை உயிருக்கு உயிராக காதலிப்பதாக தற்போது கயல் கூறுகிறார். இதனால் எழில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கயல் மற்றும் எழில் இருவரும் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கயல் உன்னுடைய ஸ்டைலிலேயே சொல்கிறேன். நான் உன்னை உயிருக்கு உயிராக இல்ல அதற்கு மேலாக காதலிக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட எழில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். மற்றொருபுறம் கயலில் பெரியப்பா அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். அவருக்கு பிரபு இறந்த இடத்திலிருந்து ஒரு செயின் ஒன்று கிடைக்கிறது.
இந்த செயினை பார்த்த அண்ணாமலை இது கயலின் தங்கை ஆனந்தியின் செயின் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். இதனால் ஆனந்தியை போலீஸ் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கயல் தனது காதலை சொன்ன நேரம் பார்த்து இவ்வாறு நடந்துள்ளதால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV