டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அதன் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார்.
அரவிந்த் கேஜரிவால்
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கான உத்தரவாதங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று வெளியிட்டார்.
24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் மற்றும் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.
நிலத்தடியில் கேபிள்கள் அமைத்து மின்சாரம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு இல்லத்துக்கும் குழாய் மூலம் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் இலவசமாக 20,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் திட்டம் தொடரப்படும்.
டெல்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போக்குவரத்து வசதியை விரிவுபடுத்துவது அதேசமயம் மலிவான விலையில் போக்குவரத்து சேவையை வழங்கப்படும்.
பெண்களுக்கான இலவச பேருந்து சேவையின் அடிப்படையில் மாணவர்களுக்கும் இது இலவசமாக்கப்படும்.
டெல்லியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். டெல்லியை பசுமை தில்லியாக மாற்ற 2 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தில்லியை குப்பைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக டெல்லி மாற்றப்படும்.
அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு சாலை, குடிநீர் விநியோகம், சிசிடிவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் அமைத்துத் தரப்படும்.
Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை