“நொடி பொழுதில் நடந்த சம்பவம்…தந்தை கண்முன் உயிரிழந்த 10 வயது சிறுவன்”

வெளியிட்டது

வாழக்கையில் எப்போது எது நடக்குமென யாராலும் கணித்திட முடியாது. அதுவே வாழ்க்கையின் மிக பெரிய ரகசியமாகும். சில விஷயங்கள் அடங்காத இன்பத்தையும் சில விஷயங்கள் அழியாத சோகத்தையும் கொடுத்துவிட்டு சென்று விடும். அவ்வாறான சம்பவம் ஒன்றே இப்பொது புதுச்சேரியில் நடந்தேறியுள்ளது.

தனது தந்தையுடன் 10 வயது சிறுவன் ஒருவன், தந்தையின் பைக்கில் வெளியில் சென்றுள்ளார். எப்போதும் தனது தந்தையுடன் தான் கிஷாந்த் என்ற அந்த 10 வயது சிறுவன் பைக்கில் ஸ்கூலிற்கு சென்று வந்துள்ளான். தந்தையான பன்னீர்செல்வம் தினமும் காலையிலும் மாலையிலும் தானே கூட்டி சென்று மகனை ஸ்கூலில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எப்போதும் போல நேற்றைய தினமும் தந்தையின் பைக்கில் ஸ்கூலிற்கு புறப்பட்டு சென்றுள்ளான் அந்த சிறுவன். புதுச்சேரியில் பாவணன் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வமும் அவருடைய மகன் கிஷாந்தும் நேற்று ஸ்கூல்லிற்கு சென்ற நிலையில் ரோட்டில் போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

 

அப்போது அந்த வழியாக சென்றுள்ள தனியார் பேருந்து ஒன்றில் சிக்கி 10 வயது மகன் கிஷாந்த் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி தந்தையின் கண் முன்னே உயிரிழுந்துள்ளார். இது சம்பவம் புதுச்சேரியிலுள்ள பழவம் சாலையில் நடந்ததுள்ளது. அந்த சம்பவம் குறித்த பரபரப்பு CCTV வீடியோ இப்பொது வெளியாகிவுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Courtesy – Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்