நடிகை குஷ்பு இந்த ஆண்டு தீபாவளியை தன்னால் கொண்டாட முடியாத போதும் வீட்டை அலங்கரித்தும், நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடியும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

80 மற்றும் 90களில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. அன்று தொடங்கி இன்று வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் குஷ்பூ. சின்னத்திரையில் பல நாடகங்களை இயக்கியும், தயாரித்தும், நடித்தும் இருக்கிறார்.
மேலும் தனது கணவர் சுந்தர் சியுடன் இணைந்து ‘அவனி சினி மேக்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பூ. நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர், குடும்பத் தலைவி, தேசிய மகளிர் ஆணையத் தலைவி என பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல் ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கெடுத்திருக்கிறார்.
இவருக்கு அவந்திகா மற்றும் அவந்திதா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அவந்திகா லண்டனில் நடிப்பிற்கான படிப்பை படித்து வருகிறார். விரைவில் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார்.
தனது கணவர், மகள்கள், குடும்பம் என மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் குஷ்பூ சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் தீபாவளியை அவர் கொண்டாடி இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் தனது வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை மற்றவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தும் அவர் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களை பகிர்ந்த அவர், இந்த வருடமும் தங்களது வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்ததால் தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.
இருந்த போதிலும் தனது நண்பர்களுடன் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கழித்ததாக கூறியிருக்கிறார். மேலும் தனது மூத்த மகள் அவந்திகாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போய் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
குஷ்பூ பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.