
மம்முட்டி மாமாங்கம் என்ற பெயரில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்வு செய்து அந்த தற்போது படத்தில் நடித்து இருக்கிறார்.
“பழசிராஜா” என்ற படத்திற்கு பின் மம்முட்டி வரலாற்று படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சில வருட இடைவெளிக்கு பிறகு அவர், “மாமாங்கம்” என்ற பெயரில் உருவாகியுள்ள ஒரு வரலாற்று படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை பத்மகுமார் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் படம் தயாராகி உள்ளது. தமிழ் படத்துக்கான வசனத்தை டைரக்டர் ராம் எழுதியிருக்கிறார். “டப்பிங்”கின்போது அவர், மம்முட்டி அருகிலேயே இருந்து உச்சரிப்புகளை சரி செய்தாராம்.