“உங்களுக்கே அவளை பத்தி தெரியும்”!!”நான் நல்லா தான் இருக்கேன்”!!ஸ்ரீநிதியின் குற்றச்சாட்டிற்கு பதில் கூறியுள்ள நக்ஷத்திரா!!!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் “யாரடி நீ மோகினி”. இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நக்ஷத்ராவும், சைத்ரா ரெட்டியும் நடித்து இருந்தனர். துணை கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடித்து இருந்தார். நல்ல வரவேற்ப்பை பெற்று  ஓடிக்கொண்டிருந்த இந்த தொடர், அண்மையில் முடிவடைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உங்களுக்கே அவளை பத்தி தெரியும்"!!"நான் நல்லா தான் இருக்கேன்"!!ஸ்ரீநிதியின் குற்றச்சாட்டிற்கு பதில் கூறியுள்ள நக்ஷத்திரா!!! 1

இதில் நடித்ததன் மூலம் மூவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. மிக நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளனர். நடிகை சைத்ராவிற்கு அண்மையில் திருமணம் முடிந்தது. மூவரும் வெவ்வேறு தொடர் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நக்ஷத்திரா கலர்ஸ் தமிழில் “வள்ளி திருமணம்” என்ற தொடரிலும், சைத்ரா நடிகர் அஜித்தின் “வலிமை” படத்திலும், இப்பொது சன் டிவியில் “கயல்” தொடரிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீநிதி மட்டும் அப்பப்போ சில தொடர்களில் தலை  காட்டி வருகிறார். வலிமை படத்தின் போதும் சர்ச்சை கூறிய வகையில் பேசி அஜித் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார். பின்னர் அழுது கொண்டே, என்னை மன்னித்து விடுங்கள், நான் அவ்வாறு கூறவில்லை என இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டார். அடுத்து அம்மாவுடன் சண்டை வீடியோ, அம்மா இவரை சபித்து வெளியிடும் வீடியோ என பலவேறு தேவையற்ற விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

திடீரென நடுவில் சிம்பு என்னை லவ் பண்றார், என்னை அவருடன் சேர்த்து வையுங்கள் என அதிர்ச்சியை கிளப்பினார். அதற்கும் சாட்சிகள் இருக்கு, நான் பொய் கூற வில்லை, என சொல்லி 3,4 நாட்களாக கலாட்டா செய்து கொண்டிருந்தார். நடிகர் சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர் உடல் நிலை மோசமாக அப்போது இவரு பேசினால் பெரிய பிரெச்சனையால் மாட்டிக்கொள்வோம் என அறிந்து ஒரு 2 நாட்கள் அம்மணி சும்மா இருந்தார்.

இப்பொது கொஞ்சம் யோசித்து 2 நாட்கள் முன்பு தான் தோழி நட்சத்திராவை திருமணம் செய்வதாக கூறி, ஒருவர் அவரை அடைத்து வைத்து ஏமாற்றி வருகிறார். அவளை காப்பாற்றுங்கள், இல்லையேல் முன்னர் இறந்த நடிகர் சித்ராவை போல இவருக்கும் நடந்து விடும் என புலம்பிய படி ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.

இரண்டு நாட்காளாக இதுவே கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இவர் எதோ ஒரு சித்து வேலை செய்கிறார் என தெரிந்தும், ஏற்கனவே இழந்த நடிகை சித்ராவை போல, இவருக்கும் ஜ்னமையில் எதாவது சிக்கல் உள்ளதா? என பலரும் நடிகை நட்சத்திரவை தேடி வந்தனர்.

இப்பொது அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், நடிகை நட்சத்திர ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நன்றாக தான் உள்ளேன், எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை, எனக்கு நிறைய பேர் மெசேஜ் செய்து கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் நினைக்கும்ப்படி எனக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவள்(ஸ்ரீநிதிக்கு) எதை எங்கு பேச வேண்டும் என தெரியாது, உங்களுக்கே தெரியும் அவள் என செய்து கொண்டிருக்கிறாள் என்று, நான் நலமாக உள்ளேன், நன்றி” என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்பொது பலரும் நடிகை ஸ்ரீநிதிக்கு “தயவு செஞ்சி நீ பொய் மெண்டல் ஹாஸ்பிடலா சேந்துக்கோ” என திட்டி வருகின்றனர். இப்பொது அவர் என செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Video Courtesy – LittleTalks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்