
சோசியல் மீடியா அனைத்திலும் ட்ரெண்டிங்கில் இருப்பது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண செய்திகளே. கடந்த ஒரு வாரமாக இவர்களுடைய திருமண செய்த்தையை மட்டுமே அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு துவங்கிய இவர்களது காதல் இப்பொது திருமணத்தில் முடிந்துள்ளது.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் நடந்த இவர்களது திருமண விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.
தனியார் OTT தளத்திற்கு ஒளிபரப்பிற்காக விற்கப்பட்ட இவர்களது திருமணநிகழ்வால் பெரிதும் இது குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருந்தன. திருமண முடிந்து திருப்பதி சென்ற தம்பதிகள் அங்குள்ள காலணிகளுக்கு தடை செய்யப்பட்ட இடத்தில் செருப்பு அணிந்து சென்று பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கடிதம் எழுத்தியும், இருவரது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக இவர்கள் மேல் மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றும் பதியப்பட்டுள்ளது. திருமணத்தன்று கடற்கரைக்கு வந்த பொதுமக்களை தனியார் திருமண நிகழ்விற்காக தடுத்து நிறுத்தியது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்ற வகையில் இப்பொது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் நடிகை நயன்தாரா நடிப்பில், விக்னேஷ் என்பவர் இயக்கிய “O2” என்ற படம் இன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. சாதாரணமாக மூச்சு விட கஷ்டப்படும் ஒரு 8 வயது மகனின் தாயாக நடித்துள்ள நடிகை நயன்தாரா, சிகிச்சைக்காக சென்ற போது, பஸ் மண்சரிவு ஒன்றில் மாட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் தவிக்கும் மகனை எவ்வாறு காப்பாற்ற போகிறார் என்பதே படத்தின் கதை.
வெளியான ட்ரைலர் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை கூட, இன்று படம் வெளியாகவுள்ளது. படத்தின் கதைக்களமும், நடிகை நயன்தாராவின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம், அங்கே தான் படம் கொஞ்சம் தொய்வாக இருக்கிறது. படம் எடுத்துக்கொண்ட களம் புதிது எனினும், கொஞ்ச லாஜிக் மீறல்களை கொண்டு படம் வந்துள்ளதால் சில இடங்களில் போர் அடிப்பதாக சிலர் கருத்து கூறிவருகிறார்கள்.
View Comments
நான் நயன்தாரா கிட்ட பேசணும்