தனது குட்டி மகன்களுடன் தல பொங்கலை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் ஷிவன் தம்பதிகள்.!

வெளியிட்டது

நயன்தாரா தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தல பொங்கலை கொண்டாடி இருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது பிள்ளைகளை தனது மார்பிலும், தனது கணவரை தோளிலும் தூக்கி வைத்து கொஞ்சும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளும் நயன் மற்றும் விக்கியின் கைகளை பிடித்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இவருக்கு கடந்த ஜூன் மாதம், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்தனர். திருமணம் முடிந்து நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது குட்டி மகன்களுடன் தல பொங்கலை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் ஷிவன் தம்பதிகள்.! 1

இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்று இருப்பதாக இணையத்தில் சர்ச்சை எழுந்தது. மேலும் வாடகை தாய் முறைக்கு திருமணமாகி குறைந்தது 5 வருட இடைவெளி இருக்க வேண்டும் என்பதால், நயன்தாரா மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வந்தது. ஆனால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் இவனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த சான்றிதழ் எல்லாம் நயன்தாராவின் தரப்பினர் அரசிடம் சமர்ப்பித்த பின்னர் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. சமீபத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கிறிஸ்துமஸை கொண்டாடி இருந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

இந்த நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு நயன் மற்றும் விக்கி தம்பதிகள் ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். தனது பிள்ளைகளை தனது மார்பிலும், தனது மனைவியை தோளிலும் தூக்கி வைத்து கொஞ்சும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். மேலும் இரண்டு குழந்தைகளும் நயன் மற்றும் விக்கியின் கைகளை பிடித்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்