மிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தற்போது கமெண்டில் சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் கமெண்ட்டில் கூறி வருகின்றனர். 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது இவர் தென்னிந்தியாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனை அவர் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.

தற்போது அவர் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தனது கணவரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் கனெக்ட் என்கிற பேய் படத்திலும் அவர் நடித்து வருகிறார். நயன்தாரா நடிக்கும் இரண்டாவது பேய் படம் இதுவாகும். மாயா என்கிற பேய் படத்தில் ஏற்கனவே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கனெக்ட் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில் நயன்தாராவின் சமீபத்திய புகைப்படம் ஒன்றைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். முகத்தில் பல ஆபரேஷன் செய்ததினால் இயற்கையாக இருக்கும் அழகு மாறி இப்படி ஆகிவிட்டார் என்று அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். நயன்தாரா அறிமுகமான புதிதில் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார்.அவர் முகத்தின் அழகை கூட்டுவதற்காக முகத்தை உள்ள சதையை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு மிகுந்த ஒல்லியான தோற்றத்தில் காணப்படும் அவர் நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து கொண்டே வருகிறார். பொதுவாக நடிகைகள் உடல் எடையை குறைப்பதும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு முக அழகை மாற்றுவதும் வழக்கம்தான்.
ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின்னர் சிலரின் முகங்கள் விகாரமாக மாறிவிடுகிறது. உதடு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உதட்டை சரிப்படுத்துகிறேன் என்ற பெயரில் உதடு வீங்கியது போல் காணப்படுகிறது. அதைப்போல் முகம் கழுத்துப் பகுதிகள் அனைத்தும் ஒருவிதமாக மாறி தோற்றமளிக்கின்றன. தற்போது நயன்தாராவின் கனெக்ட் படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் நயன்தாராவை திட்டி தீர்த்து வருகின்றனர். பழைய நயன்தாராவின் அழகிய முகம் போய் தற்போது இப்படி ஆகிவிட்டீர்களே என்றும் நிறைய ஆபரேஷன் செய்து இயற்கையான அழகு உங்களிடமிருந்து போய்விட்டது என்றும் நயன்தாராவை கமெண்ட்களில் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவுகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.