“ஆசிரியரை கேலி பண்ண கெத்தா இருக்குல சார்”!!”அடப்பாவீங்களா….இதுல என்னங்கடா கெத்து இருக்கு”!!

வெளியிட்டது

விஜய் டிவியின் இப்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்ச்சி இன்னுமும் ரசிகர்களை கவர தருவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் காரணமாகவே நீயா நானா கோபிநாத் என அவர் மிக பிரபலம் அடைந்தார். Video given below

"ஆசிரியரை கேலி பண்ண கெத்தா இருக்குல சார்"!!"அடப்பாவீங்களா....இதுல என்னங்கடா கெத்து இருக்கு"!! 1

தற்போது ஒரு மூத்த ஜெர்னலிஸ்டாக இருக்கும் அவர் பல புத்தகங்களும், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நிகழ்ச்சி பல சிறப்பான விஷயங்களை குறித்து விவாதித்துள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம், வரலாறு, குடும்பம், நட்பு, காதல், உறவு என இந்த தொடர் பேசிறாத விவாதங்களே இல்லை. பெருமபாலும் குடும்ப உறவுகளும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஒரு கலகலப்பான தலைப்பை கொண்டு வந்துள்ளது.

சென்ற வாரம் இந்த நிகழ்ச்சி கொஞ்ச குதர்க்கமான தலைப்பில் விவாதத்தை நடத்தியது. அதாவது சைவ கணவன் மற்றும் அசைவ மனைவி என்ற தலைப்புடன் நிகழ்ச்சியை நடத்தியது. தலைப்பே குதர்க்கம் என்றால் நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்கள். இந்த வாரமும் சிறப்பான ஒரு தலைப்புடன் அந்த நிகழ்ச்சி வந்துள்ளது. இப்போதுள்ள காலகட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பெரும்பாலும் உள்ள ஆசிரியர்களை மதிப்பிப்பதில்லை. அவர்களை அடிப்பதும், கத்தியால் குத்துவதும், அங்கே சிலர் அவர்களை கேலி செய்யும் விடியோக்களை எடுத்தும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த தலைப்பில் தான் இந்த வாரம் பேசப்பட்டது. அப்டோது ஆசிரியர்  ஒருவர், “இதன் மூலம் என்னப்பா கெத்து கிடைக்கபோகுது என கேட்க, யோசனை இல்லாத ஒரு மாணவன், “சார் போர் அடிக்கும் சார் அப்பப்போ அப்டியே ஜாலியா என்று சொல்கிறான். இது எந்தவகை யோசனை என நமக்கு புரியவில்லை, படிக்கும் வயதில் ஆசிரியர்களுக்கு மரியாதையை கொடுக்காமல் இவ்வாறு நடந்து கொள்வதை போய் மாணவர்கள் சிலர் பகிரங்காக “கெத்து” என நினைத்து கொண்டு திரிவது தவறான விஷயமாகும். அந்த விடியோவை நீங்களும் காண…..

Video Courtesy – Vijaytelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்