தன் மகளுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரவில்லை என்று நீயா நானாவில் தாய் ஒருவர் பேசியிருக்கும் காணொளி. தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக தான் இருக்கிறது. அதிலும் நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. எதிர் எதிர் துருவங்களை சேர்ந்த மக்களை ஒன்றாக அமர வைத்து, விவாதித்து அவர்களுக்குள் ஒரு முடிவை எட்டுவது தான் இந்த நிகழ்ச்சியின் மையக்கருவாக இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பை எடுத்துக்கொண்டு கலந்தாலோசித்து வரும் நிலையில் இந்த வாரமும் வித்தியாசமான தலைப்பை எடுத்துக் கொண்டு கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த வாரம் லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் வெர்சஸ் காதல் அமையாத பிள்ளைகள் என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்று இருக்கிறது. இதில் தன் பிள்ளைகளுக்கு காதல் அமையவில்லை என்று வருந்தும் பெற்றோர்கள் ஒருபுறமும் மற்றொரு புறத்தில் காதல் தங்களுக்கு செட்டாகவில்லை என்கிற பிள்ளைகளும் அமர்ந்து இருக்கின்றனர்.
தற்போது வெளியான ப்ரோமோவில் தன்னுடைய தாய் ஒருவர் தன் மகளுக்கு 23 வயதான நிலையில் இதுவரை ஒரு லவ் லெட்டர் கூட வரவில்லை என்று கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் மகள் நானும் என்ன செய்வது தனக்கு லவ் செட் ஆகவில்லை என்று கூறுகிறார். மேலும் முதல் வருடம் கல்லூரிக்கு போனேன். அடுத்த இரண்டு வருடங்கள் கொரோனாவினால் கல்லூரிக்கு போக முடியவில்லை என்று வருந்துகிறார். அவரின் இந்த பதிலை கேட்டு அங்கிருந்து அரங்கத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay television