நித்யா அம்மாதான் அப்படி சொன்னாங்க, அதான் லவ் பண்ணேன், நித்யாமேனன்க்கு 6 வருடமாக லவ் டார்சர்

வெளியிட்டது

தென்னிந்தியாவின் மிக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நித்யா மேனன் இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும் தமிழ்நாட்டில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ஆகாச கோபுரம் என்ற படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் நுழைந்தார் அன்று தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார் இவரின் முதல் படம் தமிழில் சித்தார்த்துடன் நடித்த 180 ஆகும் இந்த படத்திற்குப் பின்னர் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது வெப்பம் காஞ்சனா 2 ஓ காதல் கண்மணி சூர்யாவுடன் இணைந்து 24 விக்ரமுடன் இணைந்து இருமுகம் விஜய் உடன் இணைந்து மெர்சல் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து சைக்கோ போன்ற படங்களில் நடித்தார் சைக்கோ படத்தில் இவர் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் இந்த கதாபாத்திரம் இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்தது இதுவே இவர் தமிழில் நடித்த கடைசி படமாகும் தற்போது அவர் தனுஷின் திருச்சிற்றம்பலத்தில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நித்யா அம்மாதான் அப்படி சொன்னாங்க, அதான் லவ் பண்ணேன், நித்யாமேனன்க்கு 6 வருடமாக லவ் டார்சர் 1

இந்த நிலையில் நித்யா மேனனை கடந்த ஆறு வருடங்களாக ஒருவர் துரத்தி துரத்தி காதல் என்ற பெயரில் தொல்லை கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியானது. அதைப் பற்றிய நித்தியா மேனன் கூறியுள்ள செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது மோகன்லாலின் படமான ஆராட்டு சினிமா பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்களை கூறி வைரலானவர் சந்தோஷ் வர்க்கி. அவர் கடந்த ஆறு வருடங்களாக நித்யா மேனனை காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரைப்பற்றி நித்யா மேனன் கூறும் பொழுது, சந்தோஷ் வர்க்கி சொல்லுவதை நம்புகிறவர்கள் முட்டாள்கள், என்னை பல வருடங்களாக அவர் நிறைய கஷ்டப்படுத்திட்டார்.

என்னைப்பற்றி அவர் வைரலான அப்புறம் வெளிப்படையாவே பேச தொடங்கினார். ஆறு ஆண்டுகளுக்கு மேல் அவர் என்ன தொந்தரவு பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு எதிராக புகார் கொடுக்க எல்லாருமே சொன்ன போதும் கூட நான் அவரை மன்னித்துவிட்டேன். அவர் என் அப்பாவையும் அம்மாவையும் போனில் அழைத்து தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறார். ரொம்பவே சாந்தமான குணம் உள்ள என்னோட பெற்றோர்கள் கூட அவரிடம் சத்தம் போட்டு பேசும் நிலை ஏற்பட்டது. தனது தாயார் கேன்சருக்காக ஹீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த சமயத்தில் கூட அந்த நபர் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து தொந்தரவு கொடுத்ததாக நித்யா மேனன் கூறினார். இதனால அவர் போன் பண்ணாலே அவருடைய நம்பரை பிளாக் செய்ய பெற்றோர்களிடம் கூறியிருப்பதாகவும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த சந்தோஷ் வர்க்கி, தானும் நித்யா மேனனும், 2009ல் அறிமுகமாகி 2011 வரை நண்பர்களாக பழகியதாகவும், அவருக்கு வேறு பையனுடன் நிச்சயம் செய்துவிட்டதாக அவரது அம்மா கூறினார். ஆனால் அவரது அப்பாவோ நித்யா மேனனுக்கு வேறு யாரிடமும் அவருக்கு பழக்கம் இல்லை, அவர் சிங்கிள் என்று கூறினார். இதனால் தான் மிகவும் குழம்பி போய் விட்டதாகவும், இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் நித்யா மேனன் பின்னால் போயிருக்கவ மாட்டேன் என்றும், 30க்கும் மேற்பட்ட நம்பரில் இருந்து அழைத்ததாக சொல்லுகிறார்கள், இந்திய சட்டப்படி ஒருத்தருக்கு எத்தனை சிம் கார்டு எடுக்க முடியும் அப்படின்னு மக்களுக்கே தெரியும், என் மேல பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர முயன்றார்கள், என் தந்தை மறைவுக்கு பிறகு நான் உண்டு என் வேலை உண்டு அப்படின்னு அமைதியா இருக்கேன், இப்போ நித்யா மேனனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தோஷ் வர்க்கி விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

YouTube video code embed credits: Cineulagam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்