ப்ரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமா மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவரை பிரபலமாகியவர் நிவின் பாலி. இவருக்கு இப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து உள்ளது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமைந்து உள்ளது. நிவின் பாலி சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை இப்படம் ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் ஹிட் கொடுத்து வரும் இவர் மீது பெண் ஒருவர் அதிர்ச்சி புகாரை கொடுத்து இருந்தார். துபாயில் வைத்து பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி இருந்தார். இதனால் நிவின் பாலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை சினிமா ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருந்தது. இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து இருந்தநிலையில், தனது மீது பொய்ப்புகார் கொடுத்து இருப்பதாக கூறி உள்ளார்.
தற்போது இந்த வழக்கில் நிரபராதி என நிவின் பாலி விடுதலை செய்யப்பட்டு உள்ளார். இதனால் தனது ஆதரவாளர்களுக்கு நிவின் பாலி நன்றி தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.