விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது புதிதாக வீட்டிற்கு வந்த தங்கமயில், அதிகாலை 4 மணிக்கு எழுந்து கோலம் போட்டு, காலை உணவையும் தயார் செய்து வைத்து அனைவருக்கும் டீ காபி போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் தங்க மயிலை ஆகா ஓகோ என பாராட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கமயில் குடும்பம் பிராடு என்பதை அறியாத பாண்டியன் தனது மகன் சரவணனுக்கு தங்க மயிலை திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்தை கவரிங் நகைகளை போட்டும், பல குளறுபடிகள் செய்தும் தங்கமயில் குடும்பத்தினர் நடத்தி முடிக்கின்றனர். இந்த விஷயம் வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படியும் தங்கமயிலை அவரது தாயார் அறிவுறுத்துகிறார். இந்த நிலையில் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்து தங்கமயில், அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் முடிக்கிறார். இதை பார்க்கும் கோமதி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
மேலும் பாண்டியனுக்கு டீ போட்டுக் கொடுத்து அசத்துகிறார். மீனாவின் கணவர் செந்தில் அறைக்குச் செல்லும் அவர் டீ கொடுப்பதற்காக எழுப்புகிறார். ஆனால் செந்தில் அங்கு அரைகுறையாக படுத்திருப்பதை பார்த்து கதறி கொண்டு வெளியில் ஓடி வருகிறார். அந்த காமெடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video. !
YouTube Video Embed Code Credits: Vijay Television