விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இந்த வாரத்திற்கான சிறப்பு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் தொடர் ஒளிபரப்பாக சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. பாண்டியனின் மூத்த மகனாக இருக்கும் சரவணனுக்கும், தங்க மயிலுக்கும் திருமண நடந்து முடிகிறது. கவரிங் நகைகளை போட்டு திருமணத்தை தங்கமயில் குடும்பத்தினர் நடத்தி முடித்திருந்தனர். இந்த நிலையில் மறு வீட்டிற்கு தங்கமயில் மற்றும் சரவணன் தங்கமயில் வீட்டிற்கு வருகை தருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது தங்க மயிலை அழைத்து பேசும் அவரது தாயார் நகைகளை எடுத்து வா என்று சொன்னேனே? ஏன் இப்படி வந்திருக்கிறாய்? என்று கேட்க, அதற்கு தங்கமயில்,சரவணின் சகோதரி குழலி, மறு வீட்டிற்கு செல்வதற்கு எதற்கு இவ்வளவு நகைகள் என அனைத்தையும் கழற்றி வீட்டில் வைத்து விடுகிறார். இந்த விஷயத்தை தங்கமயில் அவரது தாயாரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடன் காரர்கள் வீட்டில் வந்து சத்தம் போட தொடங்குகின்றனர். அப்போது திருமணத்திற்கு வாங்கிய பணத்திற்காக கடன்காரர்கள் வந்திருப்பதாக தங்கமயிலின் தாயார் கூறி சமாளிக்கிறார்.
அப்போது சரவணன் தங்கமயில் நகைகள் அனைத்தும் வீட்டில் சும்மாதானே இருக்கிறது. அதை வேண்டுமானால் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூற, அனைவரும் திரு திருவென முழிக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television