விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், மீனா , பாண்டியிடம் பேச முயற்சி செய்கிறார் அதற்கு பாண்டி பேசாமல் சென்று விடுகிறார். இதனால் சோகமாகிய மீனா, நேராக கடைக்கு மாமாவை தேடி வருகிறார். தான் இதுவரை அப்பா அம்மாவை நினைக்காததற்கு காரணமே நீங்களும் , அத்தையும் என கூறி அழுகிறார்.இதனை கண்ட பாண்டி மனம் இறங்குகிறார்.
நான் உன்கூட பேசுறேன் என கூறுகிறார். அங்கிருந்து கிளம்பும் மீனாவை, பைக்கில் கொண்டு ஜீவாவை விட்டுவிட்டு வரும்படி கேட்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION