வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவோம், ஐ லவ் யூ அமீர்.. முதன்முறையாக அமீருக்கு காதலை சொன்ன பாவனி.

வெளியிட்டது

இறுதியாக அமீரை தான் காதலிப்பதாக பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். பிக்பாஸில் இருந்த போது அமீர் பாவனியை காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பாவனி தற்போது வரை எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் இருந்து வந்தார். தற்போது இருவரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வந்தனர். பலமுறை அமீர் பாவனியிடம் தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கூறியும், பாவனி அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிபி ஜோடிகள் இறுதி சுற்று முடிந்தது. அதில் அமீர் பாவனி, சுஜா சிவகுமார் இருவரும் முதல் இடத்தை பிடித்து இருந்தனர். இந்த நிலையில் அமீரை காதலிப்பதாக பாவனி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவோம், ஐ லவ் யூ அமீர்.. முதன்முறையாக அமீருக்கு காதலை சொன்ன பாவனி. 1

அதில் அவர், ஆம் இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம், அனைவருக்கும் நன்றி. மேலும், என்னை நம்பி, என்னை இதற்குத் தள்ளிய என் மக்களுக்கு நன்றி, உங்கள் ஊக்கம் இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது. மேலும் அமீர் மாஸ்டர் உங்களிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை, நடனம் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதுவும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைப்பது இன்னும் பயங்கரமான விஷயம், ஆனால் நீங்கள் சிறந்த மாஸ்டர் என்று நிரூபித்தீர்கள், நடனம் ஆடாதவர்களை நடனமாடவும் மற்றும் அவர்களை வெற்றி பெறச் செய்வது உங்களுக்கு மிகப்பெரிய பணி என்று எனக்குத் தெரியும்.

மேலும் இது ஒரு அற்புதமான பயணம், இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிப்பேன். உன்னை அதிகம் தெரிந்து கொண்டேன், உன்னிடமிருந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நீங்கள் ஒரு அழகான மனிதன், நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர், சிறந்த துணை நடனக் கூட்டாளி, சிறந்த நண்பர். எனவே இப்போது நாம் ஒன்றாக நம் வாழ்க்கை பயணத்தை தொடங்குவோம் மற்றும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் என்றும் என்னுடையவராக இருப்பீர்கள், நான் உங்களை நேசிக்கிறேன்..லவ் யூ என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். இதன் மூலமாக இவ்வளவு நாள் அமீர் குறித்த கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த பாவனி முதல் முறையாக தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்