Categories: அரசியல்

போராட்டக்காரர்கள் கையில் ரோஜாப்பூ

தேசிய தலைநகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், காவல்துறையினருக்கு போராட்டக்காரர்கள் மலர்களைக் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

போராட்டக்காரர்கள் கையில் ரோஜாப்பூ 1
டெல்லி போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவருக்கு மாணவி ரோஜாப்பூவினை வழங்கினார்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டக்காரர்கள் தேசிய தலைநகரில் குவிந்து வருகிறார்கள். இதனால் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இப்போராட்டத்தில், ஏராளமான போராட்டக்காரர்கள் தங்களது கைகளில் சிவப்பு வண்ண ரோஜா பூக்கள் இருந்தன. இதனை ஆயுதம் ஏந்திய காவல்துறையினருக்கு போராட்டக்காரர்கள் வழங்கினர். கடந்த ஒரு வாரமாக ஆயுதங்களை ஏந்தியபடி மாணவர்களை மிருகத்தனமாக தாக்கிய வரும் காவல்துறையினருக்கு இதனை ஒரு பரிசாக போராட்டக்காரர்கள்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்