தமிழில் முகமூடி என்ற அறிமுகமான நடிகை பூஜா கோலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினர். அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த “துவ்வடா ஜெகந்நாதம்” படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினர். தெலுங்கு முன்னணி நாயகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்து முன்னணி நாயகியானார்.

தெலுங்கில் கிடைத்த முகவரியுடன் நடுவில் சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். பெரிய மார்கெட்டை உருவாக்கிய இவர், ஒரு நேரத்தில் பெரிய 3 படங்களில் நடிகளாக ஒப்பந்தம் ஆகி மற்ற நாயகிகளை பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்தார்.
இவர் அண்டிப்பில் பிரபாஸின் “ராதே ஷியாம்”, விஜயுடன் “பீஸ்ட்”, தெலுங்கு மேகஸ்டரான சிரஞ்சீவி அவருடைய மகன் ராமசரனுடன் “ஆச்சார்யா” என மூன்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.
மூன்று படங்களும் 200 கோடிக்கு மேல் செலவு செய்து தயராகின. இதில் ‘ராதே ஷியாம்” படம் மட்டும் 350 கோடி பட்ஜெட்டில் உருவானது. இதனால் அவரும் கிட்டத்தட்ட படத்திற்கு 1 முதல் 2 கோடி வரையில் சம்பளம் வ வாங்க தொடங்கினர்.
கடந்த மார்ச் மாதம் வெளியான “ராதே ஷியாம்” படம் படுதோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 90 கோடி வரை அந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதே போல தமிழில் விஜயின் “பீஸ்ட்” படமும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த படம் முதலுக்கு மோசமில்லை என்ற அடிப்படியில் வசூல் செய்து இருந்தாலும் பூஜாவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை.
இந்த படத்தின் தோல்விகளை “ஆச்சார்யா” படத்தின் மூலம் சரி செய்து விடலாம் என எண்ணி இருந்த அவருக்கு இந்த படமும் பெரிய அடியை கொடுத்துள்ளது. மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவருடைய மகன் ராம் சரண் என இருவர் சேர்ந்து நடித்தும், அந்த படம் தெலுங்கு திரையுலகில் நீண்ட நாட்களாக படங்கள் பெறாத பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் பூஜா ஹெக்டே பெரிய மனஉளைச்சலுக்கு ஆள் ஆகி உள்ளார். தொடர்ந்து மூன்று பெரிய படங்கள் தோல்வி அடைந்ததால், கைவசம் வேற படங்கள் இல்லாமல் தவித்து வருகிறார். முன்னணி நாயகர்கள் பலரும் இனிமேல் படங்களில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என முடிவிலும் உள்ளார்.