நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் எந்த வித பின்புலமும் இன்றி தனி ஆளாக முயன்று இன்று மாபெரும் உச்சத்தில் இருக்கிறவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான “வலிமை” பாக்ஸ் ஆபிஸ்ஸில் சக்கை போடு போட்டு 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்பொது இவர் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தில் நடித்து வருகிறார். வீடியோ லிங்க் கீழே.

எப்போதும் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் வரும் போது, அவருடைய ரசிகர்கள் வெளியிடும் போட்டோவிலோ அல்லது விடியோவிலோ அவர் நடிகர் ப்ரஷாந்துடன் ஒரு போட்டோவில் மாலை இன்றி தலைகுனிந்து நிற்கும் புகைப்படமே இருக்கும்.
நடிகர் பிரஷாந்த் 1990 கடைசியிலும் 2000 தொடக்கத்திலும் இன்றுள்ள மெகா ஹீரோக்கள் விஜய்,அஜித்திற்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். வெற்றிகரமாக வளம் வந்து கொண்டிருந்த இவர், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கி போனார். இப்பொது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
அந்த போட்டோ குறித்த செய்தி எப்போதெல்லாம் தலை தூக்கினாலும் எல்லோரும் பிரஷாந்த் ஒருவரையே குற்றம் சாட்டினார். இதற்கு இப்பொது இவ்வளவு நாள் கழித்து நடிகர் பிரஷாந்த் வாய் திறந்துள்ளார்.
அது என்னுடைய ரசிகர்கள் செய்த செயல், அவர்கள் எனக்கு மாலை போட்டார்கள், நடிகர் அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் மாலை போட்டார்கள். இது ஒரு விஷயமே இல்லை. தவறாக சித்தரிக்கபட்டுள்ள விஷயம் என கூறியுள்ளார்.
Video Courtesy – News7Tamil