
இந்திய சினிமாவின் மிக பெரிய வெற்றி படங்களின் வரிசையில் 3வது படத்திலேயே, அதுவும் ஒரு சின்ன திரைத்துறையில் இருந்து வந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் ஆட்கொண்டுள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். கே.ஜி.எஃப் – 2 படங்களின் மூலம் மிக முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் பிரஷாந்த். தற்போது நடிகர் பிரபாஸுடன் இணைந்து “சலார்” படம் எடுத்து வருகிறார். அடுத்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படமும் கையில் வைத்துள்ள இவர் அடுத்த சில ஆண்டுகளில் கே.ஜி.எஃப் 3 படத்தையும் எடுக்கவுள்ளார்.
இப்பொது இந்தியாவை வியக்க வைத்துள்ள பிரஷாந்த் நீல் தற்போது தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற விக்ரம் படத்தை பார்த்து அந்த படத்தை மிகவும் பாராட்டியுள்ளார். நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, நரேன் என பலர் நடிப்பில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான படம் இப்போதைக்கு தமிழில் வெளியான ஒரு படம் எடுத்த அதிகபட்ச வசூல் இந்த படம் எடுத்துள்ளது.
400 கோடி வசூலை தாண்டியுள்ள இந்த படம் கேரள, ஆந்தராவிலும் மிக பெரிய வசூலை அள்ளியுள்ளது. நடிப்பில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என மூவருமே படத்தில் நடிப்பில் ரசிகர்களை மிரட்டி எடுக்க, இசையில் அனிருத் அதோகலாம் செய்ய, லோகேஷ் மக்கள் ரசிக்கும் படி மிக நேர்த்தியான திரைக்கதையின் மூலம் விமர்சகர்களையும் கவர்ந்து இழுத்து நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இப்பொது OTT’யில் வெளியகியுள்ள இந்த படம் இங்கும் அதிகளவில் பார்க்கப்படும் படமாக உருவெடுத்து வருகிறது. தற்போது படத்தை பார்த்துள்ள இயக்குனர் பிரஷாந்த் நீல் தன்னுடைய மகிழ்ச்சியை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர் லோகேஷ் என அனைவரையும் பாராட்டியுள்ள பிரஷாந்த், தனியாக ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ள சூர்யாவின் நடிப்பில் மிரண்டு போயுள்ளார்.