கயிற்றை பிடித்து தொங்கி தன்னை தானே கலாய்த்து கொண்ட பிரியா பவானி ஷங்கர்

வெளியிட்டது

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்து , செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக உருவெடுத்தவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது பல இளைஞர்களுக்கு ட்ரீம் girl ஆக இருக்கும் பிரியா பவானி மேயாத மான் , கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் , மாபியா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அனைவரும் அறிந்த பிரபல நடிகையாக இவர் இருந்தாலும் ஆரம்பகாலத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

கயிற்றை பிடித்து தொங்கி தன்னை தானே கலாய்த்து கொண்ட பிரியா பவானி ஷங்கர் 1

ஒரு தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் மூலம் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் பிரியா. சீரியலில் அறிமுகமான பின்பு தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் மேயாத மான் திரைப்படத்தில் இது தான் அவரது முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சூப்பரான நடிப்பால் பல இளைஞர்களின் நெஞ்சை கவர்ந்தார் பிரியா.

தற்போது பிரியா பவானி ஷங்கர் ஓஹ் மணப்பெண்ணே , இந்தியன் 2 , ஹாஸ்டல் என பல படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா தற்போது கயிற்றை பிடித்து தலைகீழாய் தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் தன்னை தானெ கலாய்த்துக்கொள்ளும்படி , நல்லா circus பண்ற மேன் நீ என்ற caption ஓடு பதிவிட்டுள்ளார்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்