லண்டனில் விவசாய நிலத்தில் செம்ம அலப்பறை செய்த பிரியங்கா.! செம்ம ஜாலியான ஒரு வீடியோ.!

வெளியிட்டது

பிரியங்கா வெளிநாட்டில் விவசாயம் செய்யும் இடங்களில் புகுந்து அலப்பறை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்றால் அது பிரியங்கா தான். 13 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் இன்று வரை விஜய் டிவியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ள பிரியங்கா அங்கு விவசாயம் செய்யும் இடங்களில் புகுந்து அலப்பறை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லண்டனில் விவசாய நிலத்தில் செம்ம அலப்பறை செய்த பிரியங்கா.! செம்ம ஜாலியான ஒரு வீடியோ.! 1

மக்கள் மத்தியில் செல்வாக்கான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவராகவும். அந்த சீசனில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே என்னும் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை அதில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து நடத்தி வந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார் பிரியங்கா.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது லண்டனுக்கு சென்றுள்ள பிரியங்கா அங்கு விவசாயம் செய்யும் இடங்களை பார்வையிட சென்றுள்ளார். அங்கு சோள கருதை யாருக்கும் தெரியாமல் திருடி தின்னுகிறார். மேலும் அங்குள்ளவர்களுடன் லூட்டி அடித்துள்ளார். அந்த வீடியோ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பல லட்சம் பார்வையாளர்களை அள்ளி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Youtube Video Code Embed Credits: Priyanga Deshpande

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்